முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 10,442 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 10,442 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 10,442 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,442 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,08,992ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 483 பேர் பலியானார்கள்.
இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,11,104ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 7,504 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 56,39,271ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,55,588 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
இதுவரை 3,80,46,590 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.9,62,134 பேர் வீடுகளிலும், 6,160 பேர் நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.