நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் வரும் நிலையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை ஜூன் 30 வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வருகிறது. நாகாலாந்தில் இதுவரை 23,854 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை நீட்டித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ஜூன் 30 வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.