ராகுல் காந்தி 
இந்தியா

'மோடி அரசின் வளர்ச்சி இதுதான்' - எரிபொருள் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி சாடல்!

பெட்ரோல், டீசல் விலை ஒருநாள் அதிகரிக்காவிட்டால், அது ஒரு பெரிய செய்தியாக மாறும் என்பதுதான் மோடி அரசின் வளர்ச்சியின் நிலை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

DIN

பெட்ரோல், டீசல் விலை ஒருநாள் அதிகரிக்காவிட்டால், அது ஒரு பெரிய செய்தியாக மாறும் என்பதுதான் மோடி அரசின் வளர்ச்சி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் முக்கிய  நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100-யைத் தாண்டியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத அரிய நாள் இன்று. விலைகள் தினமும் அதிகரிக்கப்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒருநாள் அதிகரிக்காவிட்டால், அது ஒரு பெரிய செய்தியாக மாறும் என்பதுதான் மோடி அரசின் வளர்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். 

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 98.24, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.40 ஆக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT