டிசம்பருக்குள் இளைஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி: கர்நாடக அரசு
டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கர்நாடகத்தில் தற்போது நாளொன்றுக்கு 5 முதல் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.