முகப்பு
இந்தியா

கிராமங்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது: மத்திய அரசு

கிராமப்புறங்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:28 AM
கோப்புப்படம்
பகிர்:


கிராமப்புறங்களில் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய மத்திய அரசின் செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்த சந்திப்பில் கிராமப்புறங்களில் அதிகளவில் செலுத்தப்பட்டு வருவதாகவும், கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்துவது முற்றிலும் சாத்தியமானது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் இதுபற்றி தெரிவித்தது. 

"நேற்று செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசியில் 63.7 சதவிகிதம் கிராமங்களில் மட்டும் செலுத்தப்பட்டுள்ளன. 36 சதவிகிதம் நகர்ப்புறங்களில் செலுத்தப்பட்டன. 

அதேசமயம், நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டதில் 46 சதவிகிதத்தினர் பெண்கள். 53 சதவிகிதத்தினர் ஆண்கள். இந்த சமமின்மையில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள அவர்களை முன்வர வைக்க வேண்டும்.

கடந்த சில வாரங்களில் பாதிக்கும் மேலான தடுப்பூசிகள் கிராமப்புறப் பகுதிகளில் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன. கிராமப்புறங்களிலும் தடுப்பூசி செலுத்த முடியும் என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. கிராமப்புறப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவது முற்றிலும் சாத்தியம் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக உள்ளது."  

முழு கட்டுரையைப் படிக்க →