ம.பி.யில் அதிகபட்சமாக இன்று 17 லட்சம் பேருக்குத் தடுப்பூசி: சுகாதாரத் துறை
மத்தியப் பிரதேசத்தில் இன்று (ஜூன் 22) அதிகபட்சமாக 17 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் இன்று (ஜூன் 22) அதிகபட்சமாக 17 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களை விட இது அதிகமாகும். இதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் இன்று அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண்
பேசியதாவது, மத்தியப் பிரதேசத்தில் இன்று அதிகபட்சமாக 17 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 11 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுள்ளது.
அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 7 லட்சம் தடுப்பூசிகளும், பிகாரில் 5.75 லட்சம் தடுப்பூசிகளும், ஹரியாணா மற்றும் குஜராத்தில் 5.15 லட்சம் தடுப்பூசிகளும், ராஜஸ்தானில் 4.60 லட்சம் தடுப்பூசிகளும், தமிழ்நாட்டில் 3.97 லட்சம் தடுப்பூசிகளும், மகாராஷ்டிரத்தில் 3.85 லட்சம் தடுப்பூசிகளும், அசாமில் 3.68 லட்சம் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.