ஜம்மு-காஷ்மீரில் மறுவரையறை பணிகள் விரைவில் நிறைவடைய வேண்டும்: பிரதமர் மோடி
ஜம்மு-காஷ்மீரின் மறுவரையறை பணிகள் விரைவில் நிறைவடைந்தால் தான் தேர்தல் நடைபெறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாஜம்மு-காஷ்மீரில் மறுவரையறை பணிகள் விரைவில் நிறைவடைய வேண்டும்: பிரதமர் மோடி
ஜம்மு-காஷ்மீரின் மறுவரையறை பணிகள் விரைவில் நிறைவடைந்தால் தான் தேர்தல் நடைபெறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் மறுவரையறை பணிகள் விரைவில் நிறைவடைந்தால் தான் தேர்தல் நடைபெறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்தினார். 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது. இதனால், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதுபற்றி பிரதமர் மோடி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:
"ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிப் பாதையை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களுடனான இன்றைய சந்திப்பு மிகவும் முக்கியமானது.
ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தின் ஆணிவேரைப் பலப்படுத்துவதே முதன்மையானது. மறுவரையறை பணிகள் விரைவாக நடைபெறவேண்டும். அப்போதுதான் தேர்தல் நடைபெற்று ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிப் பாதைக்கு பலம் சேர்க்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும்.
நமது ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலமே கருத்து பரிமாறிக்கொள்ளும் திறன் இருப்பதுதான். ஜம்மு-காஷ்மீர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள்தான் ஜம்மு-காஷ்மீருக்கு அரசியல் தலைமை வழங்கி தங்களது விருப்பங்கள் முறையாக நிறைவேறுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைவர்களிடம் கூறினேன்."