5 மாநில தேர்தல்: மூத்த அமைச்சர்களுடன் நட்டா ஆலோசனை
5 மாநில பேரவைத் தேர்தலுக்கான தயார் நிலை குறித்து பாஜக கட்சித் தலைமை சனிக்கிழமை ஆலோசனை நடத்தியது.
இந்தியா5 மாநில தேர்தல்: மூத்த அமைச்சர்களுடன் நட்டா ஆலோசனை
5 மாநில பேரவைத் தேர்தலுக்கான தயார் நிலை குறித்து பாஜக கட்சித் தலைமை சனிக்கிழமை ஆலோசனை நடத்தியது.
5 மாநில பேரவைத் தேர்தலுக்கான தயார் நிலை குறித்து பாஜக கட்சித் தலைமை சனிக்கிழமை ஆலோசனை நடத்தியது.
தில்லியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஹர்தீப் சிங் புரி மற்றும் கிரண் ரிஜிஜு பங்கேற்றனர். இதுதவிர தேசிய பொதுச்செயலர் புபேந்திர யாதவ் மற்றும் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு வரவுள்ள பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, கட்சியின் அமைப்பு சார்ந்த நடவடிக்கைகள் குறித்து ஜெ.பி. நட்டா பொதுச்செயலாளர்களுடன் மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.