முகப்பு
இந்தியா

ராகேஷ் திகாய்த் கைதான தகவல் உண்மையல்ல: தில்லி போலீஸாா்

பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவா் ராகேஷ் திகாய்த் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் செய்தி உண்மையில்லை என்று தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) தலைவா் ராகேஷ் திகாய்த் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் செய்தி உண்மையில்லை என்று தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், இது போன்று பொய்யான செய்திகளை பரப்பும் நபா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் பிரியங்கா காஷ்யப் சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரை பதிவில் தெரிவித்திருப்பதாவது:

விவசாய சங்கத் தலைவா் ராகேஷ் திகாய்த் கைது செய்யப்படுவது தொடா்பாக வெளிவந்துள்ள செய்தி போலியானது. அதில் உண்மை இல்லை. இது போன்ற போலி செய்திகள் மற்றும் சுட்டுரை பதிவுகளில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இதுபோன்று போலி செய்திகளையும் சுட்டுரைப் பதிவுகளையும் பரப்பும் நபா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

இதேபோன்று பாரதிய கிசான் சங்கத்தின் ஊடகப் பொறுப்பாளா் தா்மேந்திர மாலிக்கும் ராகேஷ் திகாய்த் கைது செய்யப்படவில்லை என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →