தில்லியில் உணவகங்கள், திருமண மண்டபங்கள் திறக்க அனுமதி
தில்லியில் நாளை முதல் உணவகங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தில்லியில் நாளை முதல் உணவகங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாளை(ஜூன் 28) முதல் சில விதிமுறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை முதல் தில்லியில் உணவகங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி 50 பேருடன் திருமணங்களை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோன்று உடற்பயிற்சிக்கூடங்கள், யோகா மையங்களும் 50 பேர் அனுமதியுடன் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.