இந்தியா

கேஜரிவால் செய்தியாளர்களை சந்திக்க அனுமதி இல்லை: பஞ்சாப் அரசு

DIN


தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு அனுமதி அளிக்க பஞ்சாப் முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தலுக்கான பணிகளில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாபிற்கு சென்று வருகிறார். அந்தவகையில் பஞ்சாபில் செய்தியாளர்களைச் சந்திக்க பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் ஆம் ஆத்மி சார்பில் அனுமதி கோரப்பட்டது.

இதற்கு பஞ்சாப் முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாளை காலை 1 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் அரசு அனுமதி தர மறுத்தாலும், திட்டமிட்டபடி செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று ஆம் ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017- சட்டப்பேரவைத் தேர்தல்:

2017 பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. முன்பு ஆட்சியிலிருந்த சிரோமணி அகாலி தளம் 15 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் மட்டுமே வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT