உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவு
உத்தரகண்ட் மாநிலத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திங்கள்கிழமை பிற்பகல் 12.18 மணியளவில் உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Advertisement