நரேந்திர மோடி (கோப்புப் படம்) 
இந்தியா

அமைச்சரவை விரிவாக்கம்?: பிரதமர் தலைமையில் நாளை ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (ஜூன் 30) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (ஜூன் 30) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தில்லியில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கடந்த மாதத்தில் அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடியை நட்டா சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஒரு சில மூத்த தலைவர்களுக்கு பதவிகள் வழங்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT