மாநிலங்களின் கையிருப்பில் 73 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு
மாநிலங்களின் கையிருப்பில் 73 லட்சம் கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மாநிலங்களின் கையிருப்பில் 73 லட்சம் கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 32,13,75,820 கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 31,40,75,654 கரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் 73,00,166 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், மாநிலங்களுக்கு 24,65,980 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கைய மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், இதுவரை 33,28,54,527 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.