முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

தேசிய மருத்துவர்கள் தினம்: பிரதமர் மோடி நாளை உரை

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) உரையாற்றுகிறார். 

இந்தியா

தேசிய மருத்துவர்கள் தினம்: பிரதமர் மோடி நாளை உரை

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) உரையாற்றுகிறார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
கோப்புப்படம்
பகிர்:


தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) உரையாற்றுகிறார். 

ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி மருத்துவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"கரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களின் முயற்சிகளை எண்ணி நாடே பெருமை கொள்கிறது. ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய மருத்துவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு உரையாற்றவுள்ளேன்."

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு மருத்துவர்களின், மருத்துவப் பணியின் முக்கியத்துவம் உலகளவில் உணரப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →