இந்தியா

உத்தரப் பிரதேசம் 2022-இல் ஜனநாயகப் புரட்சியைக் காணவுள்ளது: அகிலேஷ் யாதவ்

DIN


உத்தரப் பிரதேசத்தில் 2022-இல் ஜனநாயகப் புரட்சி நடைபெறும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 403 பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் இதற்கானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் குறித்து சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சுட்டுரைப் பக்கத்தில் கட்சிக் கொடியைப் பகிர்ந்து, "2022-இல் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறாது, ஜனநாயகப் புரட்சி நடைபெறும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

2017 பேரவைத் தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பாஜகவுக்கு அடுத்தபடியாக சமாஜவாதி கட்சி 47 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT