புது தில்லி: நாட்டில் இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 12,286 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதித்த 91 பேர் பலியாகினர்.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 12,286 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,11,24,527-ஆக அதிகரித்தது.
அதுபோல நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 91 பேர் உயிரிழந்தனா். இதனால் ஒட்டுமொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,248 ஆக உயர்ந்தது.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 12,464 பேர் குணமடைந்ததை அடுத்து ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,98,921 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது 1,68,358 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
திங்கள்கிழமை மாலை வரையிலும் இதுவரை 1 கோடியே 48 லட்சத்து 54 ஆயிரத்து 136 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.