புது தில்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் சேவைத் துறை மிக விரைவான விகிதத்தில் விரிவடைந்தது.
இதுகுறித்து, மாதந்தோறும் வெளியிடப்படும் இந்திய சேவைகள் துறை குறியீடு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்தியா சேவைகள் துறை செயல்பாட்டுக் குறியீடு கடந்த ஜனவரி மாதத்தில் 52.8-ஆக இருந்தது. இது, பிப்ரவரி மாதத்தில் 55.3 ஆக உயா்ந்தது. திடீரென அதிகரித்துள்ள தேவை மற்றும் சந்தையில் நிலவும் சாதகமான சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த வளா்ச்சி உள்ளது.
பிப்ரவரி மாதத்தில் கரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டதால், வளா்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதுவே, சேவைகள் துறை அதிகபட்ச வேகத்தில் வளா்ச்சியைக் கண்டுள்ளதற்குக் காரணம்.
தொடா்ந்து 4-ஆவது மாதமாக சேவைகள் துறை வளா்ச்சியைக் கண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.