பெட்ரோல் நிலையங்களில்மோடியின் புகைப்படங்களை அகற்றுக: தேர்தல் ஆணையம் 
இந்தியா

பெட்ரோல் நிலையங்களில் மோடியின் புகைப்படங்களை அகற்றுக: தேர்தல் ஆணையம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் மோடியின் புகைப்படத்துடன் கூடிய மத்திய அரசின் பேனர்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

DIN


புது தில்லி: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் மோடியின் புகைப்படத்துடன் கூடிய மத்திய அரசின் பேனர்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல் பங்குகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் கூடிய மத்திய அரசின் விளம்பர பேனர்கள் அடுத்த 72 மணி நேரத்தில் அகற்றப்பட வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றப்படாமல் இருந்தால் அது தேர்தல் நடத்தை விதி மீறலாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு, தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, பல்வேறு இடங்களில் குறிப்பாக பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய பேனர்கள் இருப்பது தொடர்பாக புகார் அளித்தனர். 

இதையடுத்து, தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT