முகப்பு
இந்தியா

தேர்தலைக் கொண்டாடும் கொல்கத்தா இனிப்பகம்

தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Updated On : 5 மார்ச் 2021, 5:01 pm IST
தேர்தலைக் கொண்டாடும் கொல்கத்தா இனிப்பகம்
பகிர்:


கொல்கத்தா: தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தல் பிரசாரங்களுக்கு இடையே அரசியல் கட்சிகளின் கொடி, பதாகை, சுவரொட்டி தயாரிப்புப் பணிகளும் களைகட்டியுள்ளது.

இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள பலராம் மாலிக் ராதாராமன் மாலிக் என்ற பிரபலமான இனிப்பகம், தேர்தல் சின்னங்களையும், தேர்தல் வாசகங்களையும், அரசியல் கட்சித் தலைவர்களின் உருவம் பொறித்த இனிப்புகளையும் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

Advertisement

Advertisement

தேர்தல் வாசகங்கள் அடங்கிய இனிப்புகளைத் தயாரிக்குமாறு நாள் ஒன்றுக்கு 150 ஆர்டர்கள் வருவதாகவும் இனிப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடையில் பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் புகைப்படங்கள் இடம்பெற்ற இனிப்புகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருப்பது, கடைக்கு வருவோரை அதிகளவில் கவர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments