கேரளத்தில் புதிதாக 2,791 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 2,791 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 2,791 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் மேலும் கூறியது:
"கேரளத்தில் புதிதாக 2,791 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 16 பேர் பலியாகியுள்ளனர். 3,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் 42,819 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 10,27,826 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,287 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
கடந்த 24 மணி நேரத்தில் 61,764 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன."