FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பெட்ரோல் கவலையா? அதிரடி விலை குறைப்பு! ரூ. 60,000க்கு ஓலா மின்சார பைக்!

ஓலா நிறுவனமே பேட்டரிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், விலை குறைக்கப்பட்டுள்ளது...

Updated On : 6 ஏப்ரல் 2026, 6:13 pm IST
ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ் - படம் / நன்றி - ஓலா
பகிர்:

ஓலா நிறுவனத்தின் ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ் என்ற மின்சார இருசக்கர வாகனத்தின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஓலா நிறுவனமே பேட்டரிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், விலை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான போர்ப்பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.

இந்நிலையில், மின்சார இருசக்கர வாகனத்தின் விலையை ஓலா நிறுவனம் குறைத்துள்ளதால், ரோட்ஸ்டெர் மின்சார வாகன விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

ஓலா நிறுவனத்தின் 9.1 கிலோ வாட் பேட்டரி திறனுடைய ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ் மின்சார இருசக்கர வாகனத்தின் அறிமுக விலை ரூ. 1,89,999 முதல் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

மின்சார வாகனங்களுக்கு அத்தியாவசியமான பேட்டரிகளை ஓலா நிறுவனமே தயாரிப்பதால், ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ் மாடல் விலையை ரூ. 60,000 ஆக ஓலா நிறுவனம் குறைத்துள்ளது.

ரோட்ஸ்டெர் எக்ஸ் பிளஸ் வாகனம் 500 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் திறன் உடையது. இதனால், அதிக தூரம் பயணிப்போருக்கும் ஏற்றதாக இந்த மின்சார வாகனம் உள்ளது.

எனினும் குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டுமே இந்த சலுகை விலையில் விற்பனை நடைபெறும் எனவும் ஓலா சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் மாலை 6 முதல் 9 மணி வரை விற்பனை நடைபெறும் என ஓலா தெரிவித்துள்ளது.

summary

Ola Roadster X+ 9.1kWh electric nike Gets A Massive Price Cut

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments