மகாராஷ்டிரத்தில் புதிதாக 11,141 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 22,19,727 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 6,013 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 38 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 20,68,044 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 52,478 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி அங்கு 97,983 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.