முகப்பு
இந்தியா

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், கர்நாடகம், குஜராத் மற்றும் தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான புதிய பாதிப்புகளில், 85.6 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில், 23,285 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 14,317 பேருக்கும், கேரளத்தில் 2,133 பேருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது, நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,97,237 ஆக உள்ளது. 

Advertisement

இன்று காலை 7 மணி வரை 2.61 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 60 வயதுக்கு மேற்பட்ட 60,61,034 பயனாளிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

55-வது நாளான நேற்று 4,80,740 தடுப்பூசிகள் போடப்பட்டன. நேற்று மகா சிவராத்திரையை முன்னிட்டு பலர் விரதம் இருந்ததால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது.

கரோனா தொற்றிலிருந்து இதுவரை 1.09 கோடிக்கும் அதிகமானோர் குணடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15,157 நோயாளிகள் குணமடைந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 117 பேர், கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments