மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,602 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,602 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,602 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,467 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 88 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 22,97,793 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21,25,211 பேர் குணமடைந்துள்ளனர். 52,811 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய தேதியில் 1,18,525 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு குணமடைவோர் விகிதம் 92.49 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.3 சதவிகிதமாக உள்ளது.