கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது..
நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையில், சனிக்கிழமை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
Advertisement
மத்திய, மாநில அரசுகள் ஏழை மக்களுக்கு கரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த மாயாவதி பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.