முகப்பு
இந்தியா

நாக்பூரில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு 

நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கரோனா அதிகரித்து வரும் பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 
அதன்படி நாக்பூர் மாவட்டத்தில் இன்று முதல் வருகிற 21ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர வெளிப் பயணங்களைத் பொதுமக்கள் தவிா்த்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
வாகன போக்குவரத்தும் முடங்கியது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நாக்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,252 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவிலிருந்து 1,033 பேர் மீண்ட நிலையில் 12 பேர் பலியாகியுள்ளனர். 
தற்போதைய நிலவரப்படி நாக்பூரில் 16,630 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments