அருணாசலில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை
அருணாசலில் கடந்த 4 நாள்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலில் கடந்த 4 நாள்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 15,000 என்ற அளவில் தினசரி பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
இதனால் மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் உள்ளட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அருணாசலில் கடந்த 4 நாள்களாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 3 பேர் மட்டுமே கரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 16,781 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். கரோனாவுக்கு 56 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,10,101 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
அதில் நேற்று மட்டும் 108 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.