முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக உள்ளது: நாடாளுமன்ற நிலைக் குழு

​கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகவும் மந்தமாக இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கவலை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
கோப்புப்படம்
பகிர்:


கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகவும் மந்தமாக இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கவலை தெரிவித்துள்ளது.

இதுபற்றி மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இதுவரை மொத்த மக்கள் தொகையில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் சென்றால் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க பல ஆண்டுகள் ஆகும்.

Advertisement

ஏராளமானவர்கள் இரண்டாவது முறை செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை. இது மிகப் பெரிய பிரச்னை.

எனவே மத்தியப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் மற்றும் மாநில, யூனியன் பிரதேச காவல் துறையினர் பரிந்துரைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு அறிவுறுத்துகிறது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments