தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரிக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பல்வேறு பாதுகாப்பு முகமையினர் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவர்கள் கூறினர். மின்னஞ்சல் கிடைத்தவுடன் கல்லூரி நிர்வாகம் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தது. அதன்அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
Advertisement
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், கல்லூரி வளாகம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் மற்றும் இதர குழுவினர் அந்தப் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், சந்தேகப்படும்படியாக எந்தப் பொருளும் சிக்கவில்லை. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.