முகப்பு
இந்தியா

அதிகரிக்கும் கரோனா: முதல்வர்களுடன் மார்ச் 17-இல் பிரதமர் ஆலோசனை

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 17-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
கோப்புப்படம்
பகிர்:


நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 17-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

காணொலி வாயிலாக நடைபெறும் ஆலோனைக் கூட்டம் காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்களிடமிருந்து கள நிலவரம் குறித்து கருத்துகள் கேட்கப்படவுள்ளன. அதன் அடிப்படையில் கரோனா பரவலைத் தடுக்க வியூகங்கள் வகுக்கப்படவுள்ளன.

கடந்த காலங்களிலும் கரோனா தொற்று தீவிரமாக இருந்த நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி கரோனாவைத் தடுப்பதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments