மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 25,681 பேருக்கு கரோனா; 70 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 25,681 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 25,681 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டி மாநிலத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதனால் திரையரங்கம் உள்ளிட்ட பொதுஇடங்களில் தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 25,681 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,22,021ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 70 பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 53,208ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 14,400 பேர் மீண்டனர். இதுவரை 21,89,965 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 1,77,560 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 8,67,333 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.