மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கரோனா
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மார்ச் 19-ம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராகவுள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நேற்று (மார்ச் 20) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 19-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் தனிமைப்படுத்தி அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராகவுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.