கரோனா பரவலுக்கிடையே பேரணி நடத்திய அமைச்சர்
கர்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், வருவாய்த் துறை அமைச்சர் அசோகா பேரணி மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாகரோனா பரவலுக்கிடையே பேரணி நடத்திய அமைச்சர்
கர்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், வருவாய்த் துறை அமைச்சர் அசோகா பேரணி மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், வருவாய்த் துறை அமைச்சர் அசோகா தொண்டர்களுடன் பேரணி மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு கர்நாடகத்தின் தர்வாத் பகுதியிலுள்ள சப்பி என்ற கிராமத்தில் பாஜக கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா தனது தொண்டர்களுடன் பேரணியாக வந்தார். இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 1,798 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.