பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி முதல் கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார்.
நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையில், திங்கள்கிழமையான இன்று தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்.