முகப்பு
இந்தியா

காபூலில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் 7 பேர் பலி: 3 பேர் காயம்

காபூலில் 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் ஏழு பேர் பலியாகியுள்ளனர். மூன்று பேர் காயமடைந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
காபூலில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் 7 பேர் பலி: 3 பேர் காயம்
பகிர்:

காபூலில் 24 மணி நேரத்தில் பல்வேறு சம்பவங்களில் ஏழு பேர் பலியாகியுள்ளனர். மூன்று பேர் காயமடைந்தனர். 

காபூலில் சாஹர் ஆசியாப் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சாலையோர குண்டுவெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். 

நேற்றிரவு காபூலில் பாக்ராமி மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு சாலையோர குண்டுவெடிப்பில், காவல்படை அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார். 

மேலும், காபூலின் பாக்மான் மாவட்டத்தில் உள்ள கார்கா ஏரியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் காயமடைந்தனர். 

கடந்த 18 நாள்களில் வெவ்வேறு சம்பவங்களில் 144 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 214 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.