விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு: ம.பி. முதல்வர்
மத்தியப் பிரதேசம் குவாலியரில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் புரானி சாவ்னி பகுதியில் இன்று காலை 7 மணி அளவில் பேருந்து- ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இதில் 12 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.