முகப்பு
இந்தியா

'இப்படி பொய் பேசுபவரைப் பார்த்ததில்லை’: பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா

பிரதமர் மோடியைப் போல் பொய் பேசுபவரை இதுவரை பார்த்ததில்லை என மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
இப்படி பொய் பேசுபவரைப் பார்த்ததில்லை’: பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா
பகிர்:

பிரதமர் மோடியைப் போல் பொய் பேசுபவரை இதுவரை பார்த்ததில்லை என மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் பிஷ்ணுபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்குவங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். 

பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியை பொய்யர் என விமர்சித்த அவர், “நான் பிரதமர் பதவியை மிகவும் மதிக்கிறேன். ஆனால் பிரதமர் மோடியைப் போன்ற ஒரு பொய்யரை நான் பார்த்ததில்லை. இன்று, பாஜக சித்ரவதை காரணமாக, உ.பி.யில் காவல்துறை அதிகாரிகள் தங்கள் வேலையை விட்டு வெளியேறி வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

வங்காள கலாச்சாரத்தை அழிக்க பாஜக உத்தரபிரதேசத்திலிருந்து குண்டர்களை அழைத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

294 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் மார்ச் 27 தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →