பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மஸ்துங் பகுதியில் சுமார் 12 பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் எதிர் திசையிலிருந்து வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலியாகினர். காயமடைந்தவர்கள் அவர்களது நெருங்கிய உறவினர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பலூசிஸ்தானில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு முக்கிய காரணம் பராமரிக்கப்படாத வாகனங்களும், சாலைகளே ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.