வங்கதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று காலை இந்தியாவிலிருந்து புறப்பட்டு 10.30 மணியளவில் வங்கதேசத் தலைநகர் டாக்காவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவம் சார்பில் சிவப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து டாக்காவிலுள்ள தியாகிகள் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் வஙதேச தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
15 மாதங்களுக்குப் பிறகு கரோனா தொற்று பரவலுக்கிடையே பிரதமர் மேற்கொள்ளும் இந்த ஆண்டின் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் இந்த பயணத்தின்போது வங்கதேசத்தின் அரசியல், கரோனா கட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.