மும்பையில் மட்டும் 6,923 பேருக்கு கரோனா
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டும் புதிதாக 6,923 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டும் புதிதாக 6,923 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு நாள்தோறு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் மும்பையில் மட்டும் 6,923 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,98,674 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,649 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement