கேரளத்தில் 2 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு
கேரளத்தில் புதிதாக 2,216 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 2,216 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 11,17,993 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,853 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 10,88,522 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 12 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,579 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
இன்றைய நிலவரப்படி 24,582 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் 47,229 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 4.69 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.