இந்தியா

மகாராஷ்டிரத்தில் தீ விபத்து: 4 பேர் பலி, 3 பேர் காயம்

PTI

மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் வீட்டோடு சேர்ந்த கடையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர் மற்றும் மூவர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மொகதா தாலுகாவின் கீழ் உள்ள பிரம்மங்காவ்ன் கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்த தீ விபத்தில் கடை உரிமையாளரின் மனைவி, தாய் மற்றும் 10 மற்றும் 15 வயதுடைய இரண்டு குழந்தைகள் தீ விபத்தில் உயிரிழந்ததாக மொகடா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மின்கசிவு காரணமாகத் தீப்பிடித்ததாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடைபெற்ற ஒரு மணி நேரத்தில் தீ மளமளவென வீட்டிற்குள் பரவியது. 

உயிரிழந்தவர்கள் கங்குபாய் மோல் (78), துவாரகா அனந்தா மோல் (46), பல்லவி மோல் (15), கிருஷ்ணா மோல் (10) என அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT