அதிர்ச்சி! இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்! 22 புத்த துறவிகள் கைது!!
அதிர்ச்சி தகவலாக இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 22 புத்த துறவிகள் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்து நாட்டிலிருந்து திரும்பிய 22 புத்த துறவிகள் ஏப்ரல் 26ஆம் தேதி இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் 110 கிலோ போதைப் பொருள்கள் கொண்டு வந்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு நாள்கள் விடுமுறையை தாய்லாந்தில் கழித்துவிட்டு, இலங்கை திரும்பிய புத்த துறவிகளின் உடைமைகளில், பயிர் வகையிலிருந்து தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
summary