முகப்பு
இந்தியா

பாஜக, கம்யூனிஸ்ட் இடையே ரகசிய புரிதல்: சென்னிதலா குற்றச்சாட்டு

​கேரளத்தில் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே ரகசிய புரிதல் இருப்பதாக அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா விமர்சித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே ரகசிய புரிதல் இருப்பதாக அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா விமர்சித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியது:

"பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே ரகசிய புரிதல் உள்ளது. கம்யூனிஸ்டுக்கு மேலும் 5 ஆண்டுகள் தேவை. பாஜகவுக்கு 10 இடங்கள் தேவை. இது அனைவருக்கும் தெரியும். மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. பாஜ மற்றும் கம்யூனிஸ்டின் புனிதமற்ற கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்."

140 பேரவைத் தொகுதிகள் கொண்ட கேரளத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →