சண்டிகர்: கரோனா பரவலால் 25 பகுதிகளுக்குத் தடை
பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் கரோனா அதிகரித்து வருவதால், 25 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் கரோனா அதிகரித்து வருவதால், 25 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தொற்று அதிகமுள்ள மாநிலங்களுக்கு, மத்திய அரசு சுகாதாரக் குழுவினை அனுப்பிவைத்துள்ளது.
அவர்கள் மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொற்று பரவும் விகிதத்திற்கேற்ப மாநில அரசுகள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி தொற்று அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அவற்றை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் சண்டிகர் நகரில் 25 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அம்மாவட்ட அரசு அறிவித்துள்ளது. அந்தப் பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,914 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,34,602-ஆக அதிகரித்துள்ளது.