தடுப்பூசி: நேபாள ராணுவத்திற்கு பரிசளித்த இந்திய ராணுவம்
நேபாள ராணுவத்திற்கு இந்திய ராணுவம் சார்பில் கரோனா தடுப்பூசிகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் கரோனா தடுப்பூசிகளை நேபாள ராணுவம் பெற்றுக்கொண்டது.
நேபாள ராணுவத்திற்கு இந்திய ராணுவம் சார்பில் கரோனா தடுப்பூசிகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் கரோனா தடுப்பூசிகளை நேபாள ராணுவம் பெற்றுக்கொண்டது.
பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
நேபாள நாட்டிற்கு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்க உள்ளதாக கடந்த 27-ம் தேதி அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், நேபாள ராணுவத்திற்கு இந்திய ராணுவம் சார்பில் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகள் இன்று (மார்ச் 30) வழங்கப்பட்டது. நேபாள தலைநகர் காத்மாண்டுவிலுள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவம் சார்பில் அனுப்பப்பட்ட ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகள், திரிபுவன் விமான நிலையத்தில் நேபாள ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுள்ளதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.