முகப்பு
இந்தியா

24 மணி நேரத்தில் புதிதாக 56 ஆயிரம் பேருக்கு தொற்று; 5.40 லட்சம் கரோனா நோயாளிகள்

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 56 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 271 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
24 மணி நேரத்தில் புதிதாக 56 ஆயிரம் பேருக்கு தொற்று; 5.40 லட்சம் கரோனா நோயாளிகள்
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 56 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 271 பேர் உயிரிழந்தனர்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, புதிதாக 56,211 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,20,95,855-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 5,40,720 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 271 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,62,114-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 37,028 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,13,93,021-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →