முகப்பு
இந்தியா

தாணேவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 3,144 பேருக்குத் தொற்று

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,144 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,12,705 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
தாணேவில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 3,144 பேருக்குத் தொற்று
பகிர்:

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,144 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 3,12,705 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

ஒரேநாளில் 10 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளதை அடுத்து, மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,454 ஆக உயர்ந்துள்ளது. தாணேவில் கரோனா இறப்பு விகிதம் 206 சதவீதமாக உள்ளது. 

மாவட்டத்தில் இதுவரை 2,77,536 பேர் தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர். மீட்பு விகிதம் 88.75 ஆக உள்ளது. தற்போது 28,715 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

அண்டை நாடான பால்கர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 49,706 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,223 ஆகவும் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.