இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

PTI

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பி.டி நித்யா கூறுகையில், 

ஏ.எல்.எச் ஹெலிகாப்டர் ஒன்று 8 பேருடன் வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள மன்பாலில் இருந்து உதம்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 

ஹெலிகாப்டரில் 2 விமானிகள், 2 தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் 4 பயணிகள் உள்பட 8 பேர் இருந்தனர். பின்னர், தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின்னர் காலை 10.45-க்கு புறப்பட்டுச் சென்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரியவன்ஷி அதிவேக டெஸ்ட் சதம்! 78 பந்துகளில் சதமடித்து ஆஸி.யை அலறவிட்ட சிறுவன்!

40 வயதில் மீண்டும் கருவுற்ற பாலிவுட் நடிகை!

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

அன்பின் வழியில்... அக்‌ஷதா!

SCROLL FOR NEXT