இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

PTI

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் பி.டி நித்யா கூறுகையில், 

ஏ.எல்.எச் ஹெலிகாப்டர் ஒன்று 8 பேருடன் வடக்கு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள மன்பாலில் இருந்து உதம்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 

ஹெலிகாப்டரில் 2 விமானிகள், 2 தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் 4 பயணிகள் உள்பட 8 பேர் இருந்தனர். பின்னர், தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின்னர் காலை 10.45-க்கு புறப்பட்டுச் சென்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலய்யாவின் 111 ஆவது படத்தில் இணைந்தார் நயன்தாரா!

“பெங்களூருவை விட்டு வெளியேறுங்கள்”... ரூ. 50 கோடி வரையிலான சலுகைகளுடன்.!

சென்னையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்கள்! மழைக்கு வாய்ப்பு!

வாக்குச்சாவடி அலுவலர்களே திணறுகிறார்கள்; அசாமுக்கு மட்டும் சலுகை ஏன்? - என்.ஆர். இளங்கோ

தில்லியில் 2 பள்ளிகள், 3 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT